மறைந்த இயக்குனர் வரவழைத்த நிம்மதி

ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க ஆர்.ரமேஷ் பாபு, ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து, சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியுள்ள படம், ‘கெணத்த காணோம்’. கதையின் நாயகனாக யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரெய்ச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்க, வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து நிவாஸ் கே.பிரசன்னா கூறுகையில், ‘இப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

சுரேஷ் சங்கையாவிடம் கதை கூட கேட்காமல் இசை அமைத்தேன். ரீ-ரெக்கார்டிங் நடந்தபோது எனக்கும், சுரேஷ் சங்கையாவுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தற்போது அவர் நம்மிடையே இல்லை என்றாலும், அவரது படைப்புகள் கண்டிப்பாக பேசப்படும். அவர் மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு என்னை தொடர்புகொண்டு, என்னை ஒரு கோயிலுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். அவருடன் சென்று கோயிலில் நேரத்தை செலவழித்தேன். அதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை சரியாக தூங்க முடியாமல் தவித்தேன்.

அன்றிரவு அந்த கோயிலில் மூன்று மணி நேரம் நிம்மதியாக தூங்கினேன். அவர் என்னை எழுப்பவே இல்லை. அதற்கு பிறகு அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றேன். அன்று ஒருநாள் அவருடன் நேரத்தை செலவழித்த பிறகு எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது. சுரேஷ் சங்கையாவின் நேர்மைக்காகவே இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றிபெறும்’ என்றார்.

Related Stories: