சுதந்திர தினத்தை முன்னிட்டு 15ம் தேதி வரை மாமல்லபுர சிற்பங்களை மக்கள் இலவசமாக பார்க்கலாம்

சென்னை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.  நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட ஒன்றிய அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. நமது நாடு, சுதந்திரம் அடைந்ததன் நினைவாக பல நினைவு சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை கட்டணமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை 15ம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறையினர் நுழைவு வாயில்களில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்….

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு 15ம் தேதி வரை மாமல்லபுர சிற்பங்களை மக்கள் இலவசமாக பார்க்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: