தென்னிந்திய மொழிகளில் தமிழ் எனக்கு எப்போதுமே நெருக்கமானது. அதே சமயம், எந்த துறை சிறப்பாக இருக்கிறது என கேட்டால் 4 மொழி துறையுமே இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப நிறைய புதுமைகளை கையாண்டு வருகிறது. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘சார்பட்டா பரம்பரை 2’, பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘தண்டக்காரண்யம்’, ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்கும் ‘ஜேக்’ தெலுங்கு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தேன். இப்போதும் மேடை நாடகங்களில் நடிக்கிறேன். அதன் ஒரு பகுதியாக எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு வாரத்தில் 2 நாட்கள் எனது குழுவுடன் சென்று நடித்துவிட்டு வருகிறேன். அதில் ஜோக்கர் வேடமிட்டு, குழந்தைகளை மகிழ்விப்பதுதான் எனது வேலை. இது மனதுக்கு பிடித்த விஷயமாக இருக்கிறது.
