காஸ் கசிவால் தீபிடித்து பொருட்கள் எரிந்து நாசம்

உத்திரமேரூர்: வளத்தோடு கிராமத்தில் காஸ் கசிவால் தீ விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக குடும்பமே உயிர் தப்பியது. உத்திரமேரூர் அடுத்த வளத்தோடு கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (35). இவரது மனைவி சுஜித்ரா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களுடன் சிவசங்கரின் பெற்றோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுஜித்ரா நேற்று காலையில் வழக்கம் போல சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, காஸ் அடுப்பில் திடீரென கசிவு ஏற்பட்டது. அதனால், திடீரென தீப்பற்றியது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுஜித்ரா அலறியடித்து கொண்டு கணவர், பிள்ளைகள், மாமனார், மாமியார் ஆகியோருடன், சாமர்தியமாக வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் சமையல் அறை பகுதிகளில் தீ மளமளவென பரவ தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த, உத்திரமேரூர் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதில், மேலும்  தீ அக்கம் பக்கத்தில்பரவாமல்  துரிதமாக வீரர்கள் செயல்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்….

The post காஸ் கசிவால் தீபிடித்து பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: