காரைக்கால்: புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் கதையை விளக்கும் வகையில், ஆவணிமாத மூல நட்சத்திரமான செவ்வாய் கிழமை காரைக்கால் கைலாசநாதர் தலையில் மண் சட்டி சுமந்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. புராணகாலத்தில் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப வேண்டும் என்ற நிலையில், புட்டு செய்து பிழைப்பு நடத்திவந்த மூதாட்டி ஒருவரால், ஆள் அனுப்ப முடியாமல் தவித்தபோது, சிவபெருமான் அந்த மூதாட்டியிடம் சென்று உங்களுக்காக தான் மண் சுமப்பதாகவும், அதற்கு கூலியாக புட்டு வழங்குமாறு கோரினராம். பிறகு வேலை செய்யும் போது விளையாடி, பிரம்பு அடிப்பட்டு, பின்னர், ஒரு பிடி மண்ணை அள்ளிபோட்டபோது ஆற்றின் உடைப்பு சரியானதாக வரலாறு.