புவனகிரி, :பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் ஈஷ்வர் ராஜலிங்கம் என்பவர் ஏராளமான பொருட்செலவில் உமைய பார்வதி சமேத மூலநாதர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இதில் உமையபார்வதி சமேத மூலநாதர், அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் மற்றும் மாரியம்மன் ஆலயங்கள் எழுந்தருளியுள்ளது.இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 5ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள், பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை 6ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது.