ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று அதன் ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் (சனி) மாலை 6 மணி அளவில் சலேசிய மாநில தந்தை அந்தோணி ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று ஜெயங்கொண்டம் மறைவட்ட அருட்தந்தை அமலதாஸ் முன்னிலையில் திருப்பலிகள் நடைபெற்றது.