மோசடி அழைப்பு என்று நினைத்து முதல் படத்தை நிராகரித்த சாய் பல்லவி

சென்னை: மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமானவர், சாய் பல்லவி. இதில் அவர் ஏற்றிருந்த மலர் டீச்சர் கேரக்டர் ரசிகர்களிடம் பிரபலமானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ெமாழிப் படங்களில் நடிக்கும் அவர், சிவகார்த்திகேயன் மனைவியாக நடித்துள்ள ‘அமரன்’ என்ற படம், வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் சாய் பல்லவி அளித்த பேட்டி வருமாறு:

என்னிடம் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் ‘பிரேமம்’ படத்துக்குப் பேசியபோது, அது ஒரு மோசடி அழைப்பு என்று நினைத்ததால் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘எனது பெயரை கூகுளில் தேடுங்கள். நான்தான் அழைத்திருக்கிறேன் என்று நம்பினால் என்னிடம் பேசுங்கள்’ என்று அல்போன்ஸ் புத் திரன் சொன்ன பிறகு கூகுளில் தேடினேன். தகவல்கள் கிடைத்தது. பிறகு அவரிடம் பேசினேன். சினிமாவில் நடிப்பதற்கான எனது கண்டிஷன்

களைப் பற்றி சொன்னேன். இந்தப் படத்துக்கு முன்பு நான் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அதற்கேற்ற உடையை அணிந்து இருந்தேன். ஆனால், ‘பிரேமம்’ வெளியானபோது அந்த வீடியோ வைரலாகி, மிகவும் மோசமான கருத்துகள் வெளியானது. அன்று முதல், இனிமேல் அதுபோன்ற உடைகளை அணியக்கூடாது என்று முடிவு செய்தேன். எனது உடலழகை வெளிப்படுத்தி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய எனது தோற்றத்துக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், என்மீது அளவு கடந்த அன்பைப் பொழிகிறார்கள். அதனால், இதே பாதையை தொடர்ந்து வருகிறேன்.

Related Stories: