செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது காய்கறிகள், பழங்கள், நாணயங்களை வாரியிறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இந்தாண்டு மாசி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2வது நாளாக மயானக்கொள்ளை விழாவும், இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், 4ம் நாள் திருவிழாவாக அம்மன் தங்க நிற பல்லக்கில் வீதி உலாவும், ஐந்தாம் நாளாக தீமிதி விழாவும், ஏழாவது நாளாக நேற்று தேரோட்டம் நடந்தது.