காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அடுத்த சேரிஅய்யம்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காவேரிப்பாக்கம் அடுத்த சேரிஅய்யம்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 9ம் தேதி மாலை பகவத் பிரார்த்தனை, சங்கல்பம், புண்ணாக ஹவாசனம், கும்ப ஸ்தானம், அக்னிப் பிரிதிஷ்டை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.