கட்டுகுடிபட்டியில் மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கட்டுகுடிபட்டி கிராமத்தில் உள்ள பிரமன் கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்களுக்கு மீன்பிடி திருவிழா குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு நேற்று காலை கட்டுகுடிபட்டி மற்றும் சுற்று கிராமங்களைச் சேர்ந்த, ஏராளமான பொதுமக்கள் கண்மாய் முன்பு குவிந்தனர். இதைத் தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதில் ஊத்தா, பரி, கச்சா, மீன்வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு பொதுமக்கள் லாவகமாக மீன்களை பிடித்தனர். இதில் கெண்டை கட்லா உள்ளிட்ட மீன்களை பிடித்து சென்றனர்….

The post கட்டுகுடிபட்டியில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: