பெரியகுளத்தில் சாலையை கடக்க முயன்றபோது டூவீலரில் சென்றவர் மீது பஸ் மோதும் வீடியோ வைரல்

*படுகாயமடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை

பெரியகுளம் : பெரியகுளத்தில் சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது பஸ் மோதியதில் வாலிபர் படுகாமயடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.மதுரை மாவட்டம், வாடிபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(29). இவர் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று பெரியகுளம் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பங்களாப்பட்டி பிரிவு பகுதியில் டூவீலரில் வந்த ஜெயபிரகாஷ், சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெயபிரகாஷ் படுகாயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post பெரியகுளத்தில் சாலையை கடக்க முயன்றபோது டூவீலரில் சென்றவர் மீது பஸ் மோதும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: