சாத்தான்குளம்: கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோயிலில் சந்திரசேகரர், மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண விழா நடந்தது. சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக் கோட்டையில் ஸ்ரீபாலாசேத்திரம் என்றும் அழைக்கப்படும் மனோன்மணி அம்பாள் சமேத சந்திரசேகரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண உற்சவ விழா ரோகிணி நட்சத்திரத்தில் நடந்தது. விழாவையொட்டி முன்னதாக கோயில் மண்டபத்தில் யாகாசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் பூஜைகள் நடத்தினர்.