உடன்குடி: குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயில் ஜப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 5.30மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம் பெருமாளுக்கு 16வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு மகாதீபாராதனை நடந்தது. மாலை 6மணிக்கு அப்பர் அடிகள் உழவாரப்பணி திருவீதி உலா, 7மணிக்கு ரிஷப வாகனத்தில ஸ்ரீபலிநாதர் திருவீதி உலா, இரவு 8.30மணிக்கு அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் திருவீதியுலா நடந்தது.