கணியம்பாடி அடுத்த பாலாத்துவண்ணான் ஸ்ரீஆதி பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

வேலூர் : கணியம்பாடி அடுத்த பாலாத்துவண்ணான் ஸ்ரீஆதி பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா  நடந்தது.வேலூர் தாலுகா, கணியம்பாடி அடுத்த பாலாத்துவண்ணான் சறுக்கு மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீஆதி பச்சையம்மன் உடனுறை ஸ்ரீமன்னாதீஸ்வரர் சப்த முனீஸ்வரர் கோயில் திருப்பணி நடந்து முடிந்து அதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 6ம் தேதி மகாகணபதி யாகமும் மகாலட்சுமியாகமும் நடந்தது. மறுநாள் கும்ப அலங்காரம் முதல் கால பூர்ணாஹூதியும் நடந்தது. 8ம் தேதி காலை 2ம் கால யாக பூஜையும் தீபாராதனையும் நடந்தது. மாலை யாகசாலை பூஜையும், அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சியில் அரியூர் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, நேற்று அதிகாலை 5 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும் தத்துவார்ச்சனையும் நடந்தது. காலை 8.30  மணியளவில் 4ம் கால பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடந்தது. தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து, இரவு 7 மணியளவில் வாணவேடிக்கையுடன் ஸ்ரீஆதி பச்சையம்மன் சிறப்பு அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடந்தது. இதில் எம்எல்ஏ நந்தகுமார், ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர் கலைசந்தர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் எம்.வெங்கடேசன் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்….

The post கணியம்பாடி அடுத்த பாலாத்துவண்ணான் ஸ்ரீஆதி பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: