கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போதுதான் காரை ஓட்டி வந்தது போலீஸ்காரர் என்பதும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. காருக்குள் இருந்த காவலர் உடையில் ராமதுரை என பெயர் இருந்தது. இதையடுத்து போலீஸ்காரரிடம் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டுகிறீர்களே, நியாயமா, குற்றசம்பவங்களை தடுக்கவேண்டிய நீங்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா, உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது என கேட்டனர். அளவுக்குஅதிகமான மதுபோதையில் இருந்தால் நான் எந்த தப்பும் செய்யவில்லை என உளறி யுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய போலீஸ்காரர்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.