குட்டியை மீட்க போராடும் நாய் கதை

சென்னை: தமிழில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த சில படங்களிலும், இராம.நாராயணன் இயக்கிய சில படங்களிலும் நடிகர்களுடன் சேர்ந்து பாம்பு, குரங்கு, நாய், மாடு போன்ற விலங்குகள் நடித்துள்ளன. தொடர்ந்து விலங்குகளை மையமாக வைத்து சில படங்கள் வந்துள்ளன. தற்போது 2 நாய்கள் மட்டுமே நடித்துள்ள ‘கிளவர்’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு மதுரை மாவட்டத்திலுள்ள டி.இராமநாதபுரம் கிராமத்தில் நடந்துள்ளது. கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் திப்பம்மாள், தீபக் கார்த்திகேயன், சஞ்சய் கார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். வாசு ஒளிப்பதிவு செய்ய, ரகுநாத் இசை அமைத்துள்ளார். செந்தில்குமார் சுப்ரமணியம் எழுதி இயக்கியுள்ளார். சைக்கோ திருடன் ஒருவனிடம் சிக்கித்தவிக்கும் தனது குட்டியை மீட்க, அம்மா நாய் எப்படி போராடுகிறது என்பது கதை.

The post குட்டியை மீட்க போராடும் நாய் கதை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: