தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசினார் கவுண்டமணி

சென்னை: பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடித்த ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, சிம்ரன் நடித்த ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை தொடர்ந்து சாய் ராஜகோபால் எழுதி இயக்கியுள்ள படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. முழுநீள அரசியல் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இதை சினி கிராஃப்ட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், நாகேஷ் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், எஸ்.ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்ராயன், லேகாஸ்ரீ, டிகேஎஸ், சதீஷ், சாய் ராஜகோபால் நடித்துள்ளனர்.

ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். கோவை லட்சுமி ராஜன் இணை தயாரிப்பு செய்துள்ளார். இப்படத்துக்காக சென்னையிலுள்ள டப்பிங் ஸ்டுடியோ ஒன்றில் கவுண்டமணி தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசினார். இது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது.

The post தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசினார் கவுண்டமணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: