பாஜக வளருவது அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் நல்லது அல்ல.. அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேச்சு!!

சென்னை : தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்துவிட்டு பாஜக வளர நினைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான பொன்னையன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. பயிற்சியின் 2ம் நாளான நேற்று அதிமுக மூத்த தலைவரும் அக்கட்சி அமைப்பு செயலாளருமான பொன்னையன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக அதிமுகவின் கூட்டணி கட்சி தான் என்றாலும் அக்கட்சி தமிழ்நாட்டில் வளரும் போது அதிமுகவும் திராவிட கொள்கைகளுக்கும் தமிழக நலனுக்கும் நல்ல தள்ள என்று கூறினார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொன்னையன், காவிரி நதிநீர் முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக பாஜக இரட்டை வேடம் போடுவதாக கூறினார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கொடுக்கக் கூடாது என்று கர்நாடக பாஜக அரசு போராடும் நிலையில், தமிழக பாஜக கட்சி இந்த விவகாரத்தில் வாய் மூடி மவுனம் காப்பதாக அதில் குறிப்பிட்டார். இதனை எல்லாம் அதிமுகவின் ஐ.டி.அணி சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் வலியுறுத்தினார். அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு தமிழ்நாட்டில் பாஜக வளர நினைக்கிறது என்று குற்றம் சாட்டிய பொன்னையன், அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை பாஜக மறைமுகமாக செய்து வருவதாக சாடிய பொன்னையன், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். …

The post பாஜக வளருவது அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் நல்லது அல்ல.. அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேச்சு!! appeared first on Dinakaran.

Related Stories: