ரெபல் படத்தில் அரசியல் இருக்கும்: ஜி.வி.பிரகாஷ்

சென்னை: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரெபல்’. இப்படம் வரும் மார்ச் 22ம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது: பா.ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச் செய்துள்ளார். ஆதித்யா இந்தப்படத்தின் மையமே அவன் தான்.

அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால் தான், இந்தப்படமே சரியாக வந்துள்ளது. அட்டகாசமாகச் செய்துள்ளான். நடிகர் வினோத் போனில் பேச ஆரம்பித்தால் அரை மணிநேரம் ஆனாலும் வைக்க மாட்டான், நல்ல பையன். நன்றாக நடித்துள்ளான். மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன், அவர் தான் ‘டார்லிங்’ படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். இது தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம். முதல்முறையாக எனது படத்தில் அரசியல் இருக்கும் என்றார். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், இயக்குநர் பா. ரஞ்சித், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குனர் தனஞ்செயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post ரெபல் படத்தில் அரசியல் இருக்கும்: ஜி.வி.பிரகாஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: