அப்போது பாலா என்னை நிறைய திட்டினார். முன்னதாக, ‘நான் அவ்வப்போது திட்டுவேன். அதை எல்லாம் நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அவரே சொல்லியிருந்தார். எனினும், அந்த நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலா திட்டியது என்னைப் பெரிதும் காயப்படுத்தியது. படப்பிடிப்பில் அதற்காக நான் மனதளவிலேயே தயாராகி வருவேன். பிறகு அவர் என்னை முதுகில் அடித்தார். இது எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. ஏற்கனவே பாலா டைரக்ஷனில் சூர்யா நடித்திருப்பதால், பாலா எப்படிப்பட்டவர் என்று அவர் தெரிந்து வைத்திருந்தார். நான் புதிதாக இணைந்ததால், எனக்கு பாலா பற்றி தெரியவில்லை. இதுபோன்ற கசப்பான அனுபவங்கள்தான், என்னை ‘வணங்கான்’ படத்தில் இருந்து வெளியேற வைத்தது’ என்றார். மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பிரேமலு’ படத்தில் நடித்திருப்பவர், மமிதா பைஜு. ‘வணங்கான்’ படத்தில் இருந்து அவர் விலகிய பிறகு சூர்யாவுடன் கிரித்தி ஷெட்டி நடித்தார். இந்நிலையில், பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா விலகினார். பிறகு கிரித்தி ஷெட்டி நீக்கப்பட்டார். தற்போது அருண் விஜய், கன்னட நடிகை ரோஷிணி பிரகாஷ் நடித்து வருகின்றனர்.
The post இயக்குனர் பாலா என்னை முதுகில் தாக்கினார்: பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு பகீர் புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.