பைசான் அன்சாரி அளித்த புகாரில், ‘பூனம் பாண்டேவும் அவரது கணவர் சாம் பாம்பேவும் சேர்ந்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து தவறான செய்தியும், அந்த நோயை கேலி செய்யும் வகையில் மரண அறிவிப்பையும் வெளியிட்டனர். அவர்கள் தங்களது சொந்த விளம்பரத்திற்காக அவ்வாறு அறிவித்தனர். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும். அவதூறு பரப்பியதால் அவர்கள் ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும். அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து அவர்களை கான்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இவ்விவகாரம் குறித்து போலீசார் வழக்கு மட்டுமே பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் பாம்பே தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
The post இறந்துவிட்டதாக நாடகமாடிய நடிகையிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு புகார்: வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.