இந்த படத்தில் ஹீரோயின், ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சுரேஷ் சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. அனுபமா பரமேஸ்வரனுக்கு இந்த படம் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதில் இரண்டு டைம்லைன் இருக்கிறது. அதனால் நான் இரண்டு கெட்அப்களில் நடித்துள்ளேன். இதற்கு முன்பு அடிதடி சண்டை என ஆக்ஷன் ஏரியாவுக்குள் சென்று விட்டேன். இந்த படம் உணர்வுகளின் குவியலாக இருக்கும். மொத்த படத்திற்கும் படத்தின் கிளைமாக்ஸ்தான் ஆதாரம். அதை நோக்கியே படமும் செல்லும். கிளைமாக்சும் பேசுப்படுவதாக இருக்கும். நான் நிறைய புது இயக்குனர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்பதை விட அவர்கள் திறமையை, உழைப்பை வெளியில் கொண்டு வர நான் ஒரு கருவி அவ்வளவு தான். இயக்குனரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம்,
The post புது இயக்குனர்களுக்கு கருவியாக இருக்கிறேன்: ஜெயம் ரவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.