ராமர் கோயில் அருகே ரூ.14 கோடிக்கு வீட்டுமனை வாங்கினார் அமிதாப்

மும்பை: ராமர் கோயில் அருகே ரூ.14.50 கோடிக்கு வீட்டு மனை வாங்கியுள்ளார் அமிதாப் பச்சன். ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அமிதாப் பச்சனுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் அமைவதால், அயோத்தி, இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அயோத்தியில் பலரும் மனைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ராமர் கோயிலில் இருந்து 10 நிமிட தொலைவில் அமிதாப் பச்சனும் மனை வாங்கியிருக்கிறார். 10 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீட்டுமனையை அவர் ரூ.14.50 கோடிக்கு வாங்கியுள்ளாராம். அமிதாப்பை தொடர்ந்து கஜோலும் அங்கு இடம் வாங்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மும்பையை சேர்ந்த வீட்டு மேம்பாட்டு நிறுவனம், ராமர் கோயில் அருகே 50 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்டவும் திட்டமிட்டுள்ளதாம். இதிலும் சில பாலிவுட் நட்சத்திரங்கள் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.

The post ராமர் கோயில் அருகே ரூ.14 கோடிக்கு வீட்டுமனை வாங்கினார் அமிதாப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: