பான் இந்தியா படத்தில் பிரியங்கா

ஐதராபாத்: நானி, இயக்குனர் விவேக் ஆத்ரேயா கூட்டணி 2வது முறை இணைந்துள்ள படம், ‘சூர்யாவின் சனிக்கிழமை’. தனித்துவமான சாகசங்கள் நிறைந்த இப்படத்தில், முற்றிலும் புதுமையான முரட்டுத்தனமான கேரக்டரில் ஆக்‌ஷன் ஹீரோவாக நானி நடிக்கிறார். டி.வி.வி என்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.வி.வி.தனய்யா, கல்யாண் தாசரி தயாரிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஷெட்யூல் அதிக நாட்கள் கொண்டதாக இருக்கும் என்றும், சண்டை மற்றும் சாகச காட்சிகள் படமாக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை ராம், லக்ஷ்மன் வடிவமைக்கின்றனர். இது பான் இந்தியா படமாக உருவாக்கப்படுகிறது.

The post பான் இந்தியா படத்தில் பிரியங்கா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: