இந்தி வெப்சீரிஸில் நடிக்கிறார் பிரசன்னா

சென்னை: இந்தி வெப்சீரிஸில் நடிக்கிறார் பிரசன்னா. இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.ஜியோ சினிமா ஓடிடியில் அபஹரன் என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. இதில் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மும்பை, கான்பூர், சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இது ராணுவ பின்னணியில் உருவாகும் வெப்சீரிஸாகும். விமானப் படையில் பணியாற்றும் வீரராக பிரசன்னா நடிக்கிறார்.

இந்த வெப்சீரிஸை சந்தோஷ் சிங் இயக்குகிறார். இவர் பாலிவுட் படங்கள் பலவற்றில் இணை இயக்குனராக பணியாற்றியவர். அபஹரன் வெப்சீரிஸின் முதல் இரண்டு சீசன்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இது மூன்றாவது சீசனாகும். இதற்கு தன்வீர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார்.

The post இந்தி வெப்சீரிஸில் நடிக்கிறார் பிரசன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: