இந்நிலையில் நடிகர் பிரித்விராஜ் தனது எக்ஸ் தளத்தில், ‘டப்பிங் பணிகள், திருத்தங்கள் எல்லாம் நிறைவடைந்தது. பல ஆண்டுகளாகப் பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்துள்ளேன். அந்த அனுபவத்தின் மூலம் தற்போது ‘சலார்’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு எனது சொந்தக் குரலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளேன். ஒரு கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் டப்பிங் செய்வது எனக்கு இதுவே முதல்முறை. என்ன ஒரு படம். டிசம்பர் 22, 2023 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேவாவும் வரதாவும் உங்களைச் சந்திப்பார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post சலார் படத்துக்கு 5 மொழியில் டப்பிங் பேசிய பிருத்விராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.