ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே 20ல் 124வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஊட்டி: ஊட்டியில் அடுத்த மாதம் 20ம் தேதி நடைபெறும் மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நீலகிரி மாவட்ட திமுக கூட்டம் ஊட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் பில்லன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக் வரவேற்றார். நீலகிரி எம்பி ராசா சிறப்புரையாற்றினார். அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் நகர, பேரூர் வார்டு கழக தேர்தல் ஆணையாளர் அழகிரி சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘124வது ஊட்டி மலர் கண்காட்சி’ மே மாதம் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை துவக்கி வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிறார். நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அவருக்கு, வரலாறு காணாத அளவில் உற்சாக வரவேற்பு அளிப்பது உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன….

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே 20ல் 124வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: