பெண் சிசு சடலம் மீட்பு

புழல்: சோழவரம் அடுத்த அத்திப்பேடு சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவறை கட்டிடத்தின் மேலே பிறந்த ஒரே நாளான தொப்புள் கொடியுடன் பெண் சிசு அசைவற்று இருந்தது. இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பெண் சிசுவை மீட்டனர். அப்போது, அந்த சிசு உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், சிசுவின் சடலத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

The post பெண் சிசு சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: