துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி

சென்னை: காமெடி வேடங்களில் நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாற்றினார். தற்போது அவர் விடுதலை 2ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் கதையில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் கே.குமார் தயாரிக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடந்து வருகிறது. சூரி நாயகனாக நடித்த ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்தது போன்று இந்த படத்தில் சசிகுமாரும், உன்னி முகுந்தனும் இணைந்துள்ளனர்.

The post துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: