ஊட்டி அருகே விபத்து மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 7 பேர் காயம்

ஊட்டி :  ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலை மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் செல்லும் வெளியூர் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால், இச்சாலையில் உள்ளூர் வாகனங்களைத் தவிர வெளியூர் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் அருகே செல்லப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள் நேற்று காலை விதிமுறைகளை மீறி கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 22வது கொண்டை ஊசி வளைவில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில், காரில் பயணித்த புகழேந்தி, ராஜ்குமார், தென்னரசு உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் மாணவர்களை மீட்டு ஊட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஊட்டி அருகே விபத்து மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: