கொரோனா புயல் ஓய்கிறது; உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 46.41 கோடியாக உயர்வு; 60.80 லட்சம் பேர் உயிரிழப்பு.!

நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.64 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 714,059 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 464,190,193 -ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 17,367 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 396,413,943 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,31,005 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 783 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 6,080,965 பேர் உயிரிழந்துள்ளனர்….

The post கொரோனா புயல் ஓய்கிறது; உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 46.41 கோடியாக உயர்வு; 60.80 லட்சம் பேர் உயிரிழப்பு.! appeared first on Dinakaran.

Related Stories: