பெண் காவலரை தாக்கி பறித்து செல்லப்பட்ட வாக்கி டாக்கி முள்ளோடையில் மீட்பு

தவளக்குப்பம் : புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த சார்காசிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜீவிதா (32). இவர் கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பெண் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் உள்ள சிக்னலில் பணியில் ஈடுபட்டார்.அப்போது, கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு கார் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. இதைக்கண்ட ஜீவிதா அங்கிருந்தவரின் உதவியுடன் காரை விரட்டி சென்று என்.ஆர்.நகர் பகுதியில் மடக்கி பிடித்தார். பின்னர் அந்த காரை கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் கொண்டு செல்லும் வழியில், ஜீவிதாவை அந்த டிரைவர் தாக்கிவிட்டு, வாக்கி டாக்கியை பறித்து சென்றார்.இது சம்பந்தமாக தவளக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சில நாட்களுக்கு முன்பு டிரைவர் ஹாஜி என்பவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் ஹாஜியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் முள்ளோடை நுழைவு வாயிலில் தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் போலீசார் கூட்டாக சேர்ந்து தேடினர். அங்கு வாக்கி டாக்கி சிக்கியது. பெண் ஊர் காவல்படை வீரரை தாக்கி, வாக்கி டாக்கியை பறித்து சென்ற வழக்கில் 18 நாட்களுக்கு பிறகு வாக்கி டாக்கி கிடைத்துள்ளது. இதையடுத்து குற்றவாளி ஹாஜியை மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்….

The post பெண் காவலரை தாக்கி பறித்து செல்லப்பட்ட வாக்கி டாக்கி முள்ளோடையில் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: