கேரள மாநில தலைவர் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் சையது ஹைதர் அலி மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய ஆலோசனைக் குழு மேலாண் தலைவரும், கேரள மாநில தலைவருமான சையத் ஹைதர் அலி தங்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் அரசியல் உரிமைக்காகக் கடுமையாக உழைத்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post கேரள மாநில தலைவர் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: