தண்டவாளத்தில் ஒய்யாரமாக நின்றுகொண்டு : ‘செல்பி’ எடுத்த 4 இளைஞர்கள் ரயில் மோதி பலி: தலைநகர் டெல்லியில் சோகம்

குர்கான்: டெல்லியில் ரயில் தண்டவாளப் பகுதியில் நின்று கொண்டு செல்பி எடுத்த 4 இளைஞர்கள் அவ்வழியாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியான குர்கிராமில் ரயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்கள், அவ்வழியாக ரயில் சென்ற போது தங்களது மொபைல் போனில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ரயில் மோதி, 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ‘டெல்லியின் சராய் ரோஹில்லாவிலிருந்து, அஜ்மீர் நோக்கிச் சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது, குர்கான் ரயில் நிலையத்திலிருந்து பாசாய் ரயில் நிலையம் நோக்கிச் சென்றது. அப்போது 18 முதல் 21 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள், ரயில் சென்ற வழியில் நின்று கொண்டு அருகே இருந்த தண்டவாளத்தில் செல்பி எடுத்தனர். அவர்களுக்கு வெகு அருகே ரயில் வந்தும், அலட்சியமாக செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது ரயில் மோதியதில், நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில் இவர்கள் தேவிலால் காலனியில் வசிக்கும் சமீர் (19), முகமது அனஸ் (20), யூசுப் என்கிற போலா (21), யுவராஜ் கோகியா (18) என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்….

The post தண்டவாளத்தில் ஒய்யாரமாக நின்றுகொண்டு : ‘செல்பி’ எடுத்த 4 இளைஞர்கள் ரயில் மோதி பலி: தலைநகர் டெல்லியில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: