டாஸ்மாக்கில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் அடிக்கடி காய்லர்மேடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மட்டும் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று 3வது முறையாக காய்லர்மேடு கிராம டாஸ்மாக் கடையில் துளையிட்டு 30 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் உழியர்கள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.   …

The post டாஸ்மாக்கில் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: