சொகுசு கார் எரிந்து நாசம்

கூடுவாஞ்சேரி: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த திருஞானம் (36) நேற்று மாலை சிங்கபெருமாள்கோவிலுக்கு சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் திடீரென கரும்புகை எழுந்தது. உடேன காரை சாலையோரமாக நிறுத்தி இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த மறைமலைநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சொகுசு காரில் பரவிய தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். எனினும், அந்த சொகுசு கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்….

The post சொகுசு கார் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: