இது தவிற மைசூர், பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் இருந்துகூட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே குறைந்த செலவில் முழு விடுமுறையை செலவிடமுடியும் என்பதே ஆகும். இந்த அணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதால் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் பவானி அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதும் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் திறக்கப்பட்டதால் கொடிவேரி அணையில் சுமார் 10,000 கனஅடிநீர் செல்கிறது.
இதனால் கடந்த 9 நாட்களாக கொடிவேரி அணை பகுதிகளில் சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு பல்வேறு பகுதிகளில் வருந்துள்ள சுற்றுலாபயணிகள் அணையில் குளிக்க முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
The post ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.
