கஞ்சா விற்றவர் கைது

 

திருச்சி, ஆக.3: திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ராம்ஜிநகர், குளக்கரை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எ.புதூர் போலீசாருக்கு கடந்த 1ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற நபரை பிடித்து விசாரிக்கின்றனர். அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைப்போல், திருச்சி பாலக்கரை பழைய ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்ற நாகமங்கலம் தென்றல் நகரை சேர்ந்த வீரமணி (26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: