செல்போன் பறித்தவர் கைது

 

திருச்சி, ஜூலை 30: திருச்சி தென்னுார் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி தென்னூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் மனோகர்(46). இவர் ஜூலை 27ம் தேதி அப்பகுதியிலுள்ள உக்கிர காளியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி மனோகர் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(25) கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன் பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: