அப்போது பொத்தேரி பகுதியில் ஒரு தனியார் குடியிருப்பில் போதை மாத்திரைகள், போதை சாக்லேட், கஞ்சா உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக, 2 வாலிபர்களை பிடித்து, மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அளித்த புகாரின் பேரில், எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என 11 பேர் கைது செய்தனர்.
பின்னர், அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இப்பகுதிக்கு போதை பொருட்கள் எப்படி கொண்டு வரப்படுகிறது, போதைப் பொருட்களை விற்பனை செய்ய மூளையாக செயல்படும் நபர்கள் யார், இவற்றிற்கு பின்னால் இருப்பது யார், போதைப்பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post போதை சாக்லேட் பயன்படுத்திய எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் உள்பட 11 பேர் அதிரடி கைது: போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.
