இவ்வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், சிறப்பு விசாரணை அதிகாரிகள் கலப்பட நெய் குறித்த விசாரணை அறிக்கையை சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்நிலையில் நேற்று ஆந்திர உயர் நீதிமன்றம் கலப்பட நெய் சப்ளை செய்த போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர்கள் போமில், விபின் மற்றும் வைஷ்ணவி டெய்ரி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி வினய் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும் சிறப்பு விசாரணை அதிகாரிகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த 3 பேருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.
