இத்காரணமாக தண்டவாளம் பலமிழந்திருக்கும் என கருதி ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியே வந்த விழுப்புரத்திலிருந்து திருச்சி வந்த பயணிகள் (வ.எண் 56111) ரயில் மண் சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. இதேபோல் திருச்சியிலிருந்து அரியலூர் வரும் பல்லவன் ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும், சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் விழுப்புரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் 5 பேர், சுரங்கபாதை ஊழியர்கள் 5 பேர் சேர்ந்து மண் சரிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் அந்த வழியாக ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. இதனால் அனைத்து ரயில்களும் 45 முதல் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
The post அரியலூர் அருகே தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு: ரயில்கள் நிறுத்தம் பயணிகள் அவதி appeared first on Dinakaran.
