இந்நிலையில் கொளஞ்சியப்பனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக பத்மாவதிக்கு அடிக்கடி சந்தேகம் இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தின் முன்பு கொளஞ்சியப்பன் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் உள்ளதாக கூறி நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் பத்மாவதி புகார் அளித்துள்ளார். இதனால் கணவன், மனவைி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல நேற்றுமுன்தினமும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பத்மாவதி, இரவு வீட்டில் தூங்கிய கணவர் கொளஞ்சியப்பன் தலையில் கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் இறந்த கணவரின் உடலுடன் நேற்று காலை வரை வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து காலையில் தனது உறவினருக்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் உறவினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்த போது, கொளஞ்சியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொளஞ்சியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, பத்மாவதியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நெய்வேலியில் வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் கணவனை சரமாரி கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொன்ற மனைவி: விடிய விடிய சடலத்துடன் வீட்டிலேயே இருந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.
