இதன் மூலம் கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுக்கடி காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பம்மல் மண்டல அலுவலகத்திலும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, முறையாக கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிப்பதுடன், தெருக்களில் தேங்கிக் கிடக்கும் குப்பையை சுத்தம் செய்தும், கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்தும், கொசுக்களின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பம்மல் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.
