அதனை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், விஜயனின் மனைவி கஸ்தூரி கலெக்டர் தர்ப்பகராஜிடம் மனு அளித்தார். அதில், ‘எனது கணவர் எங்கள் குடும்பத்தினர் மீது இருந்த விரக்தியால், வீடு மற்றும் சொத்து அசல் பத்திரங்களை கோயில் உண்டியலில் செலத்திவிட்டார். ஆசிரியராக பணிபுரியும் என்னுடைய ஊதியத்தில் இருந்தே அந்த வீட்டை கட்டினேன். வேறு வீடு எதுவும் இல்லை. எனவே, உண்டியலில் செலுத்திய பத்திரத்தை திரும்ப வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
The post கணவர் கோயில் உண்டியலில் செலுத்திய ரூ.4 கோடி சொத்து பத்திரம் திரும்ப கேட்டு மனைவி மனு: திருவண்ணாமலை கலெக்டரிடம் வழங்கினார் appeared first on Dinakaran.
