துடிப்புடன் ஆடிய சபலென்கா முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2வது செட்டில் கார்சன் சற்று சவாலை எழுப்பியபோதும் சாமர்த்தியமாக சமாளித்த சபலென்கா அதையும் கைப்பற்றினார். இறுதியில் 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, ஹங்கேரி வீராங்கனை அன்னா பொண்டாரை, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் செக் வீரர் ஜிரி லெஹெக்கா, ஆஸ்திரேலியா வீரர் ஜோர்டான் தாம்ப்சன், இத்தாலி வீரர் மாட்டியா பெலூக்கி, அமெரிக்க வீரர் லேர்னர் டியன் உள்ளிட்டோர் வெற்றி வாகை சூடினர்.
The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்: மெர்சல் ஆன கார்சனை வெற்றி கண்ட சபலென்கா; 2வது சுற்றுக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.
