இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி, இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. நீதிபதி நரசிம்ம மூர்த்தி இருதரப்பு வாதங்களையும் விசாரித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், செம்மரக்கட்டைகளை கடத்திய பரமன் அன்புவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி அவரை போலீசார் நெல்லூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post செம்மரக்கட்டை கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.
