சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளார். துணை ராணுவ படையினரை எந்தெந்த பகுதிகளில் பணியமர்த்துவது தொடர்பாக அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்துகிறார். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது.
