இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போரில் அமொிக்கா தலையிடாது என்று அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டும்தான் முடியும். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலில் நாம் தலையிட போவதில்லை. அது எங்கள் வேலை அல்ல. அரசியல் ரீதியாக பிரச்சனையை தீர்க்க முயற்சி மேற்கொள்வோம்.
இரு நாடுகளும் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது. இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் கையில்தான் உள்ளது. போரை கைவிட இருநாடுகளிடமும் நாங்கள் கூற முடியாது. இவ்வாறு ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது; அது எங்கள் வேலை அல்ல: ஜே.டி.வான்ஸ் உறுதி!! appeared first on Dinakaran.
